வாழை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்! விவசாயி வேதனை!

top-news
FREE WEBSITE AD

 ஜெரான்டுட், ஆகஸ்ட் 23: ஜெராண்டுட் Felda Gelanggi Dua என்ற இடத்தில் உள்ள சிறு தோட்டத்தில் விளைந்த வாழை மரங்களை காட்டு யானைகள் கூட்டமாகச் சென்று பயிர்களை நாசம் செய்ததால் விவசாயி ஒருவருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

பிரபலமான 'pisang tanduk’ மற்றும் 'berangan' வகைகள் உட்பட 150 வாழை மரங்களை யானைகள் மிதித்து நாசம் செய்துள்ளன.

ஹெக்டேர் பரப்பளவுள்ள சிறிய தோட்டத்திற்கு காலை 8 மணியளவில் வந்தபோது, ​அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக 41 வயதான விவசாயி முஹமட் ரிட்சுவான் சே தான் கூறினார்.

எல்லா வாழை மரங்களும் அழிந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மூசாங் கிங் துரியன் மரங்களை யானைகள் சேதப்படுத்தவில்லை, நள்ளிரவு மற்றும் விடியற்காலையில் பண்ணையை யானைக் கூட்டம் தாக்கியது என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *