TNB Bill தள்ளுபடி SCAM - பொதுமக்களே உஷார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 6: மின்சாரக் கட்டணத் தள்ளுபடி என்கிற பெயரில் போலியான தள்ளுபடியை மோசடிப் பேர்வழிகள் வழங்கி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

மார்ச் முதல் RM279,289 இழப்புகள் சம்பந்தப்பட்ட ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது தெரிவித்தார்.

Facebook வழியாக Tenaga Nasional Bhd (TNB) பில்களில் 20% முதல் 30% வரை தள்ளுபடியை சிண்டிகேட்டுகள் வழங்குவதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஆர்வமுள்ள தரப்பினர் ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும், அவர்களின் பில்லின் புகைப்படத்தை அனுப்பவும் என்று கூறப்படும்.

பின்னர்  மோசடி செய்பவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தைக் காட்ட ரசீதைத் திருப்பி அனுப்புவார்கள், அதற்கு முன், கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 'தள்ளுபடித் தொகையை' கழித்த பணத்தை செலுத்துமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்துவார்கள்.

இருப்பினும், பணம் செலுத்திய பிறகும்,  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பில்கள் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

எனவே, ஆன்லைனில் வழங்கப்படும் தள்ளுபடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *