இன்று புக்கிட் ஜாலில் கால்பந்து போட்டியில் மலேசியா - சிங்கப்பூரை வீழ்த்துமா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச.20-

ஆசியான் கால்பந்து வெற்றியாளர் போட்டியில் இன்று இரவு 9மணிக்கு கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசியா சிங்கப்பூரை சந்தித்து விளையாடவுள்ளது.இரண்டு குழுக்களுக்கும் வாழ்வா சாவா என கடுமையான போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.

குழுபட்டியலில் தாய்லாந்து மூன்று ஆட்டங்களில் வென்று 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கின்றது.இரண்டாவது
இடத்தில் சிங்கப்பூர் 5புள்ளிகள், மூன்றாவது இடத்தில் 4 புள்ளிகள் பெற்று மலேசியாவும் கம்போடியாவும் சம புள்ளிகளோடு இருக்கின்றன.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா 4-0 கோல் கணக்கில் சிங்கப்பூரை வென்றால் மட்டுமே ஆசியான் கால்பந்து போட்டில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவில் மலேசியா குழு வெற்றி பெறவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இம்முறை ஆசியான் கால்பந்து போட்டியில் சிங்கப்பூர் குழு பலம் வாய்ந்த குழுவாக திகழ்கிறது.இன்று புக்கிட் ஜாலில் அரங்கம் ரசிகர்களால் அதிர போகிறது. நாமும் அரங்கம் சென்று மலேசிய குழுவிற்கு ஆதரவு வழங்குவோம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *