பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

top-news
FREE WEBSITE AD

ஐபிஎல் டி20 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று இடம் பெற்றது.

இன்னும் ஒரு அணி யார் என்பதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் 3 அணிகள் தகுதி பெற்றுள்ளதே தவிர கொல்கத்தாவைத் தவிர மற்ற 3 அணிகளும் எந்தெந்த இடங்களைப் பிடிக்கப்போகின்றன என்பது இதுவரை உறுதியாகவில்லை.

சிஎஸ்கேவைப் பொருத்தவரை, நாளை பெங்களூரூவில் நடக்கும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலே சிஎஸ்கே அணி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்துவிடும்.

பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) நடக்கும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு வானிலை கணிப்புகள் கூறுகின்றன. ஒருவேளை அந்த ஆட்டம் நடந்து சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகள் பெறும். மழையால் கைவிடப்பட்டால் 15 புள்ளிகள் பெறும்.

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டம் நடந்து, அதில் சிஎஸ்கே வென்றால், 16 புள்ளிகள் பெற்று வலுவான நிகர ரன்ரேட்டில் 2-ஆவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் தோற்க வேண்டும், சன்ரைசர்ஸ்-பஞ்சாப் ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும் இது நடந்தால், சிஎஸ்கே 16 புள்ளிகளோடு வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்கலாம். 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடத்தை ராஜஸ்தானும் பிடிக்கலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *