கெரில்லா தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்குமா? களத்தில் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி!

top-news
FREE WEBSITE AD


தானாமேரா, ஜூன்‌ 2: கிளந்தான்‌ மாநிலத்தில்‌ உள்ள நூற்றாண்டு காலம்‌ பழமைவாய்ந்த கெரில்லா தோட்டத்‌ தொழிலாளர்களுக்கு நிலம்‌ வேண்டி ஒற்றுமைத்‌ துறை துணை அமைச்சர்‌ செனட்டர்‌ சரஸ்வதி கந்தசாமியிடம் அத்தோட்டத் தொழிலாளர்கள்‌ முறையிட்டனர்‌.

நாட்டின்‌ கிழக்கு மாநிலமான கிளந்தான்‌ கெரில்லா தோட்டத்தில்‌ அதிகமான இந்தியர்கள்‌ வாழ்ந்து வருகின்றனர்‌. கெரில்லா தோட்டத்தில்‌ வேலை செய்து வந்த அவர்களுக்கு நிலம்‌ வேண்டும்‌ என்ற கோரிக்கையை பல ஆண்டு காலமாக அத்தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ எழுப்பி வந்தனர்‌. 

ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வரும்‌ அந்தத்‌ தோட்டத்‌ தொழிலாளர்களை நேற்று துணை அமைச்சர்‌ செனட்டர்‌ சரஸ்வதி சந்தித்ததுடன்‌, அத்தோட்டத்தில்‌ நடைபெற்ற 108-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்‌.


நிகழ்வில் பேசிய துணை அமைச்சர சரஸ்வதி கந்தசாமி, தோட்டத்‌ தொழிலாளர்களுக்கு கெரில்லா தோட்டத்தில்‌ இருந்து 12 கிலோமீட்டர்‌ தொலைவிலுள்ள கம்போங்‌ கோபெக்கில்‌ நிலம் ‌ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும்‌ தோட்டத்தில்‌ ஒதுக்கப்பட்ட நிலம்‌ அதிக தூரம்‌ இருப்பதால்‌ தொழிலாளர்கள்‌ அங்குச் செல்ல விரும்பவில்லை. காரணம்‌ தோட்டத்தில்‌ கோயிலும்‌ மயானமும்‌ இருப்பதாலும்,‌ பல வசதிகள்‌ உள்ளதாலும்‌ அவர்கள் உடன்படவில்லை.

எனவே, தோட்டத்‌ தொழில்‌ மூலம்‌ பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வரும்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கையை மாநில அரசாங்கம்‌ மனிதாபிமானத்துடன்‌ பரிசீலித்து தீர்வு காண வேண்டும்‌ என்று அவர்‌ கேட்டுக்கொண்டார்‌.

நேற்று நடைபெற்ற இந்த ஆலய விழாவில்‌ துணை அமைச்சர்‌ செனட்டர்‌ சரஸ்வதி கந்தசாமிக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

இதனை அடுத்து தோட்டத்திற்குச்‌ சென்ற துணையமைச்சர் அங்குள்ள மூதாட்டி ஒருவரைக் கண்டதோடு, அவரை நலம்‌ விசாரித்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *