சிலாங்கூர் சட்டமன்றத்திலிருந்து ஹில்மான் இடாம் இடைநீக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 28: பெரிகாத்தான் நேஷனல்  பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான ஒழுங்கு நடவடிக்கைகளின் சமீபத்திய நிகழ்வாக, கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான் இடாம் சிலாங்கூர் சட்டமன்றத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய சட்டமன்ற நடவடிக்கைகளின் போது தனது வாய்மொழிக் கேள்விக்குப் பிறகு, துணைக் கேள்வி எழுப்புவதிலிருந்து தன்னைத் தடுத்த மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சானின் முடிவை எதிர்த்ததால், தனக்கு இந்த இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டதாக ஹில்மான் கூறினார்.

லாவின் இந்த நடத்தை சர்வாதிகாரமானது என்றும், சட்டமன்ற விவாதங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருப்பதாகக் கூறி அதைக் கடுமையாக அவர் விமர்சித்தார்.

 சிலாங்கூர் மக்களின் நலன்களுக்காகப் பேசுவதிலிருந்து தன்னையும் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்களையும் தடுத்த சபாநாயகரின் சர்வாதிகாரப் போக்கினால் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினார்.

நேற்று, இரண்டு பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து பிஎன்-இன் தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் மற்றும் குவாங் சட்டமன்ற உறுப்பினர் ரஃபிக் அப்துல்லா ஆகியோரை இடைநீக்கம் செய்ததன் மூலம், லாவ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக மாநில எதிர்க்கட்சித் தலைவர் அஸ்மின் அலி குற்றம் சாட்டியிருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *