ஒவ்வொரு மாநிலத்திலும் ட்ரோன் பிரிவு அமைக்க குடிநுழைவுத் துறை திட்டம்

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜூலை 10-

நாடு முழுவதும் கண்காணிப்பு திறனை அதிகரிக்கவும், அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஒவ்வொரு மாநிலத்திலும் ட்ரோன் பிரிவை அமைக்க குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

அந்தப் பிரிவை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக, தற்போது ஒவ்வொரு மாநில அமலாக்கப் பிரிவிலும் பயிற்சி பெற்ற ட்ரோன் இயக்குநர்கள் உள்ளனர் என்றார்.

அப்போது, உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக சிறிய அளவிலான பல ட்ரோன்கள் பெறப்பட்டதாக Zakaria Shaaban தெரிவித்தார்.

அதன் பின்னர், அமலாக்க நடவடிக்கைகளின் தேவைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் துறை தனது ட்ரோன் சொத்துகளை மேலும் அதிகரித்ததாக அவர் கூறினார்.

இந்த ட்ரோன் பயன்பாடு, குறிப்பாக கடினமாக அணுகக்கூடிய பகுதிகள், எல்லைப் பகுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *