மலேசியாவுடன் 'Win - Win' திட்டங்கள்! - சிங்கப்பூர் பிரதமர் கருத்து

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா,  ஜூன் 28:  மலேசியாவுடன் மேலும் 'Win -Win' திட்டங்களை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் - சிங்கப்பூர் காஸ்வேயின் 100வது ஆண்டு விழாவையொட்டி, இன்று காலை காஸ்வேயின் நடுப்பகுதியில் நடந்த விழாவில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி மற்றும் ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்ட பின்னர் அவர் தனது முகநூல் பதிவில் இவ்வாறு கூறினார். 

சிங்கப்பூரும் மலேசியாவும் சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் பல துறைகளில் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு இணைப்புகள் மற்றும் உறவுகள் வலுப்படும்  என்று வோங் தனது பதிவில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *