இந்திய இணை அமைச்சருடன் செனட்டர் க.சரஸ்வதி & M.குலசேகரன் கலந்துரையாடல்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் வெளியுறவு இணை அமைச்சர் கிர்தி வர்டன் சிங் உடனானச் சந்திப்பு பயன்மிக்க சந்திப்பாக அமைந்தது என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார். இச்சந்திப்பில் பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரனும் பங்கேற்றார்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய இணை அமைச்சர் கிர்தி வர்டன் சிங் செனட்டர் சரஸ்வதியுடன் தனிப்பட்ட முறையில் கலந்தாய்வித்ததாகவும் அது குறித்தான நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பிற்குப் பின் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது குறித்தானப் புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்தையும், துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக ஆயுர்வேத இருக்கை அமைப்பது குறித்தானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இணை அமைச்சரும் செனட்டர் சரஸ்வதி, துணை அமைச்சர் குலசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *