சிங்கப்பூர்காரர்கள் அப்படி ஒன்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் கிடையாது! - பி.கே.ஆர் எம்.பி கருத்து

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 16: சிங்கப்பூரில் இருந்து தன்னார்வலர்களை வரவழைப்பதுடன், கிராமப்புற மாணவர்களுக்கு மொழியைக் கற்பிக்க ஓய்வுபெற்ற மலேசிய ஆங்கில ஆசிரியர்களைப் பெற வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் பக்காத்தான் ஹராப்பான் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா இன்று நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தினார்.

அவர்களை வரவேற்கிறோம், ஆனால் சமமான அல்லது அதிக திறன் கொண்ட மலேசியர்களை மறக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை  அவர் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட முறையில், சிங்கப்பூரர்கள் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக பேசக்கூடியவர்களாக தாம் கருதவில்லை என்று குறிப்பிட்ட அவர்,  உண்மையில், ஆங்கிலத்தில் சரளமாகத் தெரிந்த பல மலேசியர்கள், தங்களிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நம்மிடம் பல ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களுக்கு இப்போது எந்த வேலையும் இல்லை, எனவே கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க அவர்களை ஏன் ஈடுபடுத்தக்கூடாது?  என கல்வி அமைச்சர் ஃபத்லினா அவர் கேள்வி எழுப்பினார்.

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்களை மாணவர்களின் மொழிப் புலமையை அதிகரிக்க மீண்டும் கற்பிக்குமாறு அமைச்சு வரவேற்பதாக ஃபத்லினா பதிலளித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *