சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விபத்தில் காயமடைந்தோருக்கு இழப்பீடு அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கடந்த மாதம் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. 

அந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. 

தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் விபத்தில் காயமடைந்தோருக்கு இழப்பீடு  அறிவித்திருக்கிறது. 

இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'விமானத்தில் பயணம் செய்த மொத்த பயணிகளின் பயணக் கட்டணம் முழுவதுமாக திருப்பித் தரப்படும். விபத்தில் லேசாக காயமடைந்தோருக்கு 10,000 டாலர்,ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக 25,000 டாலர் இழப்பீடு வழங்கப்படும். 

அதன் பின்னர் அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான கூடுதல் உரிய இழப்பீட்டு அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எங்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்' என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]