மலேசியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற சிங்கப்பூர் தயார்!

top-news
FREE WEBSITE AD

அடுத்த ஆண்டு மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கு ஆதரவாக மலேசியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற சிங்கப்பூர் தயாராக உள்ளதாகத் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர்  குடியரசிற்கு வந்துள்ள மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசனிடம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.

ஆசியான் மையத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா உலகளவில் ஒரு பிரகாசமான இடமாக இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகளை வழங்குவதற்கு நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் இணைப்பு மற்றும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற முன்முயற்சிகள் மூலம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் இருதரப்பு பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாகக் கையாள்வதும் இதில் அடங்கும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *