ஆசியான் கிண்ணக் கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் அணி தகுதி!

- Muthu Kumar
- 22 Dec, 2024
புக்கிட்ஜாலில், டிச.22-
ஆசியான் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை மலேசியா இழந்துள்ளது.புக்கிட்ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் சிங்கப்பூர் அணியை சந்தித்து விளையாடினர்.
இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புக்கிட் ஜாலில் அரங்கில் திரண்டனர்.இதில் கடுமையாக போராடிய மலேசிய அணியினர் கோல் ஏதுமின்றி சிங்கப்பூர் அணியுடன் சமநிலை கண்டனர்.
இதனை தொடர்ந்து மலேசிய அணியினர் ஏஎப்எப் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.சிங்கப்பூர் அணி ஆசியான் கிண்ணக் கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *