உயரும் ரிங்கிட் வேல்யூ! ஆசியாவின் மதிப்பு மிகு நாணயமாக ரிங்கிட்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 13: இந்த ஆண்டு ஆசியாவின் சிறப்பாகச் செயல்படும் நாணயமாக மலேசிய ரிங்கிட் விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார உந்துதலை வலுப்படுத்துவதும், உலகளாவிய வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதுமாக விளங்குவதால், நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையை மலேசிய ரிங்கிட் நெருங்குகிறது.

 ரிங்கிட் ஒரு டாலருக்கு RM4.1 ஐத் தாண்டி வலுவடையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது மே 2021 க்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டக்கூடும் என்று BNY மற்றும் மலாயன் வங்கி பெர்ஹாம் தெரிவித்துள்ளது.

புளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியப் பத்திரங்களில் கிட்டத்தட்ட U$4 பில்லியன் வாங்கியுள்ளனர், இது நாணயத்தை நிலைநிறுத்த உதவுகிறது.

மூன்றாம் காலாண்டு வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது, உலகளாவிய தேவையில் ஏற்பட்ட மீட்சியிலிருந்து மலேசியாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *