பேரரசர் தம்பதியரின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 17: மாட்சிமை தங்கிய  பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர், நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும்  தங்களின் ஹஜ்ஜுப் பெருநாள்  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தியாகச் சடங்குகள் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு, கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்,

புனித பூமியில் உள்ள மலேசிய யாத்ரீகர்கள் தங்கள் புனித யாத்திரையை பாதுகாப்பாகச் செய்து, ஹஜ் மப்ரூர் வழங்கப்பட வேண்டும் என்று தாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

நமது அன்புக்குரிய தேசம் தொடர்ந்து நல்வாழ்வு பெற நமது கூட்டுப் பிரார்த்தனைகளையும் அனுப்புவோம் என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *