அரசு வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் SPM கல்வித் தகுதி தேவை! - பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 16:  அரசு வேலை வாய்ப்புக்கு குறைந்தபட்சம் SPM  தகுதி இருக்க வேண்டும் என்றும், அரசு வேலை வாய்ப்புக்கான  நுழைவுத் தகுதியை உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது பொதுச் சேவைப் பணியாளர்களின் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்,

இதற்கிடையில், பொது சேவையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான முறையில் பதவிகளின் தரத்தை தரப்படுத்தவும் மறுவகைப்படுத்தவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பொதுச் சேவையில் சிறந்த திறமையாளர்களைப் பெறுவதற்காக, 17 அரசுப் பணிகளுக்கான நியமன நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அன்வர் மேலும் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *