அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா குழியில் விழுந்த மாதுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

 கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா  பகுதியின் சாலையில்  உள்ள ஒரு குழியில் விழுந்த மாதுவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலிஹா முஸ்தபா இன்று நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மீட்புப் பணியினர் தங்களது பணியை செய்து வருவதாகவும், இது வரை நான்கு குழிகள் தோண்டப்பட்டு பார்க்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு குழிகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

ஒருவேளை மீதமுள்ள இரண்டு குழிகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நாளை இதற்கான சிறப்பு சந்திப்பை நடத்தி மேற்கொண்டு என்ன செய்யலாம் என முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அமைச்சர் அவர்களுக்கு தமது ஆறுதல் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *