SPM தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களை கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ளும்! - கல்வி அமைச்சர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

SPM 2023 தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 1.2 சதவீதம் குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

 

விண்ணப்பம் செய்தவர்களில்  373,525  மாணவர்கள் , மொத்தம் 97.4 விழுக்காடு மாணவர்கள் SPM 2023 தேர்வில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் பள்ளியை உள்ளடக்கிய ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் விளைவே இச்சாதனை என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், SPM 2023 தேர்வில் இருந்து வெளியேறிய அல்லது கலந்து கொள்ளாத மாணவர்களை கல்வி அமைச்சு (KPM) இன்னும் கவனத்தில் கொள்கிறது, என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் தேர்வு எழுத   அமர்வதற்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை கல்வி அமைச்சு உருவாக்கிக் கொடுக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, SPM 2023 முடிவுகள் அறிவிப்பு செய்தியாளர் கூட்டத்தில், பொதுத் தேர்வு எழுத பதிவு செய்த 383,685 விண்ணப்பதாரர்களில் 373,525 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

இதற்கிடையில், SPM 2023 தேர்வுக்கான தேர்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் மேம்பாட்டை உறுதிசெய்ய கடுமையாக உழைத்த அனைவரையும் கல்வி அமைச்சர் வாழ்த்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *