சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மீது JPJ சோதனை நடவடிக்கைகள் தொடரும்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர்,ஜூலை 2: சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மீதான சோதனை நடவடிக்கைகள் நீட்டிக்கப்படலாம் என்று சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) மூத்த அமலாக்கப் பிரிவு இயக்குநர்  முஹம்மது கிஃப்லி மா ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை (ஏஏடிகே) மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து ஜூலை 31 வரை இந்த நடவடிக்கை தொடரும்.

கோம்பாக்கில் உள்ள ஜேபிஜே அமலாக்க மையத்தில் சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்களை ஆய்வு செய்தபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள் அல்லது நிறுவனங்களுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை  21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து, கெந்திங் ஹைலேண்ட்ஸில் இருந்து இறங்கும் போது கவிழ்ந்ததில், இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *