UK வன்முறை! - மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள்!

top-news
FREE WEBSITE AD

இங்கிலாந்தின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்கள அச்சுறுத்தலாக மாறி வன்முறையாக உருவெடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

எனவே, அங்கு வசிக்கும் அல்லது பயணிக்கும் மலேசியர்கள் போராட்டப் பகுதிகளிலிருந்து விலகி, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை எளிதாக்க லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மலேசியர்கள் பிரச்னைக்குரிய பகுதிகளைத் தவிர்க்கவும், தூதரக உறவுகளுடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் நல்ல நிலையில் இருப்பதை தாங்கள் அறிய முடியும் என்று அவர் இன்று விஸ்மா நெகிரியில் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *