தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் - அமெரிக்கா பரிசீலனை?
- Surendran Sumdraraj
- 16 Apr, 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பது குறித்து இரு தரப்பும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட இந்த இடைக்கால போர் நிறுத்தம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் பல்வேறு நாடுகளின் நடுவர்தன்மையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான அடிப்படை அம்சங்கள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் ஹார்முஸ் நீரிணை மீளத் திறப்பு, அணு திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக நீட்டிக்க கோரிக்கை வைக்கப்படவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



