இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

top-news
FREE WEBSITE AD

தெல் அவீவ், ஜூன் 8 –

ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நேரடி மோதல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் தகவலின்படி, ஈரான் வடக்கு இஸ்ரேலை நோக்கி 11 ஏவுகணைகளை ஏவியுள்ளது. பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் நடைபெற்ற தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது. டெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் தப்ரிஸ் உள்ளிட்ட நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *