அதிகரிக்கும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் – இஸ்ரேல் தாக்குதல் காரணமா?
- Surendran Sumdraraj
- 09 Apr, 2026
மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலகின் முக்கிய கடல்சார் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிரான பதிலடி என கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் நிலவி வந்தபோதிலும், லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தின் சுமார் 20 விழுக்காடு நடைபெறும் முக்கிய பாதையாகும். இதனால், இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக பொருளாதாரம் மற்றும் எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதேவேளை, ஈரான் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், பாதுகாப்புக்காக கட்டணமும் விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமை காரணமாக, ஆயிரக்கணக்கான கப்பல்கள் வளைகுடா பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளதுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஏற்கனவே நழுவும் நிலையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக நாடுகள் கவலையுடன் சூழ்நிலையை கவனித்து வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



