ஷா ஆலமில் இரட்டை மாடி வீட்டில் தீ விபத்து! 5 பேர் தப்பினர்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலமில் உள்ள ஓர்  இரட்டை மாடி வீடு தீப்பிடித்ததில் ஐந்து பேர்  பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு 12.33 மணியளவில், ஷா ஆலம் Seksyen 9 இல் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஷா ஆலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தீ பெரும்பாலும் வீட்டின் இரண்டாவது மாடியில் பற்றியதாகவும் குறிப்பிட்ட அவர், வீடு சுமார் 30% எரிந்துள்ளதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]