நான்கு ஹெக்டேர் பரப்பளவு தீயைக் கட்டுப்படுத்தியப்தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர்!
- Muthu Kumar
- 25 Mar, 2026
பாசிர் மாஸ், மார்ச் 25
நேற்று கம்போங் லத்தியில் சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் பரவிய புதர் மற்றும் புல் தீயைக் கட்டுப்படுத்தியதன் மூலம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஒரு பள்ளி உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் காப்பாற்றினர்.பிற்பகல் 3.20 மணிக்குத் தங்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்ததாகவும், 15 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் நடவடிக்கை தளபதி அசார் முகமது கூறினார்.
இந்தத் தீயானது சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் புதர் மற்றும் காய்ந்த புற்களில் பரவியிருந்தது. அது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு மதப் பள்ளியை நோக்கியும் பரவியிருந்தது. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால், பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.மாலை 5 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இரவு 8 மணிக்கு மீட்புப் பணி முழுமையாக நிறைவடைந்ததாகவும் அசார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



