செராஸ் இடைநிலைப்பள்ளியில் தீ!

- Shan Siva
- 10 Jun, 2025
கோலாலம்பூர்,
ஜூன் 10: செராஸ், ஆலம் ஷா அறிவியல்
இடைநிலைப் பள்ளியில் உள்ளா நிர்வாக கட்டிடம் இன்று
அதிகாலை தீ விபத்தில் எரிந்தது.
சம்பவம் குறித்து
அதிகாலை 4.15 மணிக்கு அவசர
அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு மையம் தெரிவித்தது.
இதனை அடுத்து,
பண்டார் துன் ரசாக், ஜாலான் ஹாங் துவா, செராஸ் மற்றும் செந்துல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 44 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ
இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அது ஒரு
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்கட்டிடத்தில்
ஆசிரியர்கள் அறை, கூட்ட அறை,
பதிவு அறை, ஆய்வகம் மற்றும் பிற அலுவலகங்கள் உட்பட பல வசதிகள்
இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு
வீரர்கள் காலை 5.08 மணிக்கு தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காலை 6.18 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
உயிரிழப்புகள்
எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட சேதம் குறித்து
விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *