தலைநகர் பெரோடுவா தொழிற்சாலைக்கான கம்பி சேமிப்புக் கிடங்கில் தீ! - 80 விழுக்காடு அழிந்தது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 25: தலைநகர், பத்தாங் காலி, ஜலான் ஈப்போவில் உள்ள பெரோடுவா தொழிற்சாலைக்கான கம்பி சேமிப்புக் கிடங்கு இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 சதவீதம் எரிந்து நாசமானது.

அதிகாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், அதற்கு முன்பு கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து  காலை 5.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு மீட்புப் படை வந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீ அதிகாலை 5.45 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *