தென் கொரியாவில் தீவிபத்து!

top-news
FREE WEBSITE AD

தென் கொரியாவில் கடந்த மூன்று நாட்களாக பெரிய காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சியோலில் இருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ தொடங்கியதகாவும் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு   தீயணைப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கொரிய ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை சுமார் 3,286.11 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது, வடக்கு கியோங்சாங் மாகாணத்தின் உய்சோங் மற்றும் சான்சியோனில் முறையே ஆயிரம் ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது.

நேற்று நிலவரப்படி, நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *