கிள்ளான் துறை முகத்தில் தீ! 14 கொள்கலன்கள் தீயில் எரிந்தன!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூன் 9 : கிள்ளான், புலாவ் இண்டாவின் மேற்கு துறைமுகத்தில் பல்வேறு தொழில்துறை பொருட்கள் அடங்கிய மொத்தம் 14 கொள்கலன்கள்   இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிற்பகல் 1.40 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து அதிகாரிகள் உட்பட 24 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில்  தெரிவித்தார்.

கன்டெய்னர்களின் உள்ளடக்கங்களில் பிளீச் செய்யப்படாத கிராஃப்ட் பேப்பர் அல்லது பேப்பர் போர்டு, சலவை வகை  இயந்திரங்கள், பாலிவினைல் குளோரைடு பாலிமர்கள், சான் பைன் மரம் அத்துடன் சாரக்கட்டு மற்றும் ஷட்டரிங் உபகரணங்கள் இருந்ததாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மதியம் 2.39 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், உயிர்ச்.சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *