சுங்கத் துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு! தாய்லாந்து அதிகாரிகளுடன் அரச மலேசிய போலீஸ் படை ஒத்துழைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜூன் 24:  கடந்த புதன் கிழமை தும்பாட், கம்போங் சிம்பாங்கானில் போக் மாட் சட்டவிரோதத் தளம் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறை அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் அரச மலேசிய போலீஸ் படை ஒத்துழைப்பை நல்கி வருகிறது.

 

இச்சம்பவம் இரு நாடுகளுடனான உறவு சம்பந்தப்பட்டதாக உள்ளதால் இது குறித்து தாங்கள் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக மலேசிய-தாய்லாந்து எல்லையில் பொது தற்காப்பு படைப் பிரிவு ரோந்து நடவடிக்கையை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது போன்ற சோதனை நடவடிக்கைகளைத் தனியாக மேற்கொள்ள வேண்டாம் என சுங்கத் துறைக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எல்லையில் அமலாக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *