அரசு ஊழியர்களுக்கு ரமலானுக்கு முதல் நாள் விடுமுறை! - மலாக்கா முதல்வர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜன 19:  பிப்ரவரி 19 ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரலானின்  முதல் நாளில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கும்  மலாக்கா அரசு சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கடுமையாக உழைத்த மலாக்காவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விடுமுறை என்று, மலாக்கா முதல்வர் அப்துல் ரவூப் யூசோ கூறினார்.

இந்த விடுமுறையைத் தங்கள் குடும்பங்களுடன் ரமலான் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளுக்கு நல்ல முறையில் பயன்படுத்த முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த ரமலான் விடுமுறையுடன், தொலைவில் உள்ளவர்களை நாம் நெருக்கமாகக் கொண்டுவர முடியும். மேலும் நீண்ட காலமாக ஒன்றாக இருக்க முடியாதவர்களை மீண்டும் ஒன்றிணைக்க முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் இன்று ஆயர் கெரோவில் உள்ள மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் தனது புத்தாண்டு உரையில் கூறினார்1

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *