ட்ரோன் மூலம் தாப்பா சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 10: தாப்பா சிறைக்குள் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ட்ரோனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று காலை 11.30 மணியளவில் சிறைச்சாலை வளாகத்தில் ரோந்து சென்றபோது ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் ட்ரோனை சிறைச்சாலை சார்ஜென்ட் ஒருவர் கண்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் அஸிஸி மாட் அரிஸ் தெரிவித்தார்.
இந்த ட்ரோனில் போதைப்பொருள் அடங்கிய  பை ஒன்று இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில், பைக்குள் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 122 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடி நிரப்பப்பட்ட மூன்று பிளாஸ்டிக் பொட்டலங்கள் அடங்கிய பை இருந்தது தெரியவந்தது.
12.9 கிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமைன் என சந்தேகிக்கப்படும் படிகக் கட்டிகளைக் கொண்ட இரண்டு  பிளாஸ்டிக் பைகளையும் கண்டறிந்ததாகவும். ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற முதல் வழக்கு இதுவாகும் என்று அஸிஸி கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *