எக்ஸ்போ ஓசாகா 2025-இல் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்த ஆயர் சிலாங்கூர் தேர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்.3-

மலேசிய அரசாங்கத்தால், வரும் எக்ஸ்போ 2025 ஓசாகா, ஜப்பான் நிகழ்வில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக ஆயர் சிலாங்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான அனைத்துலக நிகழ்வு, உலக நாடுகளின் புதுமை, தன்னிறைவு, மற்றும் எதிர்காலத்துக்கான முன்னேற்ற முயற்சிகளை வெளிப்படுத்தும் மேடையாக விளங்குகிறது. ஆயர் சிலாங்கூர், மலேசியாவின் நீர் மேலாண்மை மற்றும் புதுமையான துறைசார் திட்டங்களை அங்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: "இது எங்களுக்கு பெருமைமிகு தருணம். மலேசியாவின் தன்னிறைவு, நவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் தூய்மையான நீர் மேலாண்மையை உலக அரங்கில் பகிரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் அனுபவங்கள், சர்வதேச அளவில் முக்கிய பங்களிப்பாக அமையும்.

எக்ஸ்போ ஓசாகா 2025 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா சார்பில் ஆயர் சிலங்கூரின் பங்கேற்பு, நாட்டின் நிலையான முன்னேற்ற இலக்குகளை வலியுறுத்தும் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *