கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

top-news
FREE WEBSITE AD

 நடிகை ஐஸ்வர்யா ராயின் மயில் போன்ற இந்த ஆடையை பற்றி தான், நெட்டிசன்கள் தீவிரமாக கலாய்த்தும், விவாதித்தும் வருகின்றனர்.

கடந்த மே 14 ஆம் தேதி பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் சென்ற காணொளி முதலில் வெளியானது.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியின் முதல் நாளன்று, தங்க நிறத்தினாலான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கறுப்பு ஆடையில், ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் ரேம்ப் வாக் சென்றார்.

இந்நிலையில், இரண்டாம் நாளன்று, நீலம் மற்றும் சில்வர் நிறத்தினாலான மயில் போன்ற ஆடையை அணிந்து வந்தார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஆடை வடிவமைப்பாளரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஈவா லாங்கோரியாவுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *