விருது வழங்கும் விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா!

top-news
FREE WEBSITE AD

 1990களில்  உலக அழகி பட்டம் வென்றார் என்றாலும், இன்றும் அவரை உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்று 30 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்போதுமே தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாராய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1, பாகம் 2 என இரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். தவிர எந்திரன், ராவணன், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் என பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். சமீப காலமாக அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக பிரிந்து வாழ்கின்றனர் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. குறிப்பாக மாமியார் ஜெயா பச்சனுக்கு, ஐஸ்வர்யா ராயை பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக் பச்சன், தனது பெற்றோர் அமிதாப் பச்சன் ஜெயா பச்சன் உள்ளிட்ட குடும்பத்துடன் பங்கேற்ற நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக அந்த விழாவுக்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் எந்த விழாவுக்கும் ஒன்றாக இணைந்து வருவதும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் பங்கேற்றார். அந்த விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமும் கலந்து கொண்டார். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாராய் இருவரும் ஒன்றாக மேடையேறினர். அவர்கள் இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மேடைக்கு முன்புறம் முதல் வரிசையில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஐஸ்வர்யாராய், அவரது மகள் ஆராத்யா மற்றும் விக்ரம் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த சீனியர் நடிகர் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஐஸ்வர்யா ராயிடம் பேசுவதற்காக அருகில் வந்தார். அப்போது அங்கு இருந்த ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா, சிவராஜ்குமார் காலில் விழுந்து ஆசி பெற்றார். பெரியவர்களை பார்த்தவுடன் அவர்களது காலில் இருந்து ஆசீர்வாதம் பெற்ற ஆராத்யாவின் குணத்தை பாராட்டுகின்றனர். அந்த காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *