“பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய்” – பாகிஸ்தான் விமர்சனம்; நெதன்யாகு கடும் பதில்

top-news
FREE WEBSITE AD

இஸ்லாமாபாத், ஏப். 10-

மத்திய கிழக்கு பதற்ற சூழலில், இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் வெளியிட்ட கருத்துக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லெபனானில் நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேல் “மனிதகுலத்திற்கு ஒரு சாபம்” என்றும், “பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய் போன்றது” என்றும் ஆசிப் கடுமையாக விமர்சித்தார். மேலும், அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தக் கருத்துகள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பின்னர், சர்ச்சை அதிகரித்த நிலையில் அந்த பதிவை அவர் நீக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலளித்த நெதன்யாகு அலுவலகம், பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தை “மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், “இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற அழைப்பாக இது பார்க்கப்படுகிறது” என்றும் கடுமையாகக் கண்டித்தது.

மேலும், அமைதி பேச்சுவார்த்தைகளில் நடுநிலை வகிக்க முயலும் ஒரு நாட்டின் அமைச்சரிடமிருந்து இத்தகைய கருத்துகள் வருவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த வார்த்தைப் போர், ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *