15 வயது சிறுமியைக் காணவில்லை!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18: 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

 

நூருல் பாத்திஹா அப்துல்லா என்ற அச்சிறுமி காணாமல் போனதாக புதன்கிழமை இரவு 8.40 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.

 

அச்சிறுமி கடைசியாக ஜூலை 15 மாலை 5.30 மணியளவில் 63, ஜாலான் PJU7/8, டேசா தெமுவான் டாமான்சாரா பெர்டானா என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் காணப்பட்டார்.

 

170 செமீ உயரம், கருமையான நிறம், கருப்பு முடி, மற்றும் பழுப்பு நிற கண்கள் அவரது அடையாளம் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பெட்டாலிங் ஜெயா போலீஸ் செயல்பாட்டு அறை 03-7966 2222ஐத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *