காணாமல் போன சிறுவர்கள் பராமரிப்புப் பணியில் இருந்த லிஃப்டில் கண்டுபிடிக்கப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20: செராஸ், டேசா பெட்டாலிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று மதியம் முதல் காணாமல் போன இரு சிறுவர்கள் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டனர்.

11 மற்றும் 10 வயதுடைய அந்தச் சிறுவர்கள், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லிஃப்டில் சுமார் ஒன்பது மணிநேரம் சிக்கித் தூங்கிக்கொண்டிருந்ததை CCTV காட்சிகள் காட்டியதை அடுத்து மீட்கப்பட்டனர். இச்சம்பவம் நள்ளிரவு 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இரு சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் பலவீனமாக காணப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் ரவீந்தர் சிங் சர்பன் சிங் உறுதிப்படுத்தினார்.

நேற்று மதியம் சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் இரண்டு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன என்று அவ்ர் கூறினார்.

மதியம் 2.30 மணியளவில் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்கு முன்பு லிஃப்டில் சிக்கியதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *