காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23: ஜொகூர், இஸ்கந்தார் புத்ரியில் உள்ள எகோ கேலரியா ஷாப்பிங் சென்டரில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 20) காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

லியோ, சிலாங்கூர் பத்தாங்காலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இஸ்கண்டார் புத்ரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள், 28 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை, ஜொகூர் பாரு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 365 வது பிரிவின் கீழ் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *