காணாமல் போன ஆடவர் சடலமாக மீட்பு! மலேயேறிய போது நிகழ்ந்த சோகம்!

top-news
FREE WEBSITE AD


செமினி, புக்கிட் புரோகாவில்  நேற்று முன்தினம்   காணாமல் போன பதின்ம வயது இளைஞர் நேற்று இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

பதினாறு  வயதான எடி புத்ரா அஃபாண்டி என்ற அந்த இளைஞர்  தனது 40 வயது பராமரிப்பாளர் மற்றும் 13 வயதுடைய இரண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் காலை 7.50 மணிக்கு மலையேறும் நடவடிக்கையைத் தொடங்கியதாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைட் ஹாசன் தெரிவித்தார்.

மதியம் 12.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நபர் காணாமல் போனதை மற்றவர்கள் உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 19 மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு மலையேறும்  பாதைக்கு அருகிலுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் அவ்விளைஞர் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *