GISBH விவகாரம்: பள்ளி முதல்வர், தலைவர் கைது!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: GISB Holdings Sdn Bhd நிறுவனத்துடன்  தொடர்புடைய ஒரு பள்ளியின் தலைவர் மற்றும் முதல்வர் ஆகிய இருவர், மாறுபட்ட இஸ்லாமிய போதனைகளைக்குப் புத்துயிர் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2016 இல் நெகிரி செம்பிலானில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட அவுராத் முஹம்மதியாவின் போதனைகளை புதுப்பிக்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 58 மற்றும் 51 வயதுடைய அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 9 மணியளவில் கோலா பிலா காவல் நிலையத்  தலைமையகத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மத விவகாரத் துறை அமலாக்கப் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஜாக்கி ஹம்சா தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *