அடி - உதை - கைது - அது மகாதீர் காலம்! - ஃபாமி ஃபாட்ஸில்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 3: ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற மகாதீரின்  கூற்று உண்மையல்ல என்று, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

அந்த முன்னாள் பிரதமர் இன்னும் பேசலாம் மற்றும் அறிக்கைகள் வெளியிடலாம் மற்றும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள சுதந்திரமாகச் செல்லலாம் என்று ஃபாமி கூறினார்.

தற்போதைய நிர்வாகத்திற்கும் அவரது நிர்வாகத்திற்கும் இடையே வானமும் பூமியும் போன்றது என்று வர்ணித்த ஃபாமி, அவர் இன்னும் நடமாடுவதில் சுதந்திரமாக இருக்கிறார், கலந்துகொள்ள சுதந்திரமாக இருக்கிறார், அறிக்கைகளை வெளியிட இன்னும் சுதந்திரமாக இருக்கிறார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்று ஃபாமி பாட்ஸில் வலியுறுத்தினார்.

அவரது காலத்தில் செய்தித்தாள்கள் மூடப்பட்டது. சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அடித்து, கைது செய்யப்பட்டனர், உதைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

மேலும்,  எண்ணற்ரோர் சிறையில் அடைக்கப்பட்டதை தாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் இன்று,  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த வாரம் நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று கூறி அரசாங்கத்தை மகாதீர் விமர்சித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஃபாமி இவ்வாறு கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *