Fixed Deposit பணம் 2 மில்லியன் மாயம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: பேராக், கோலா காங்சாரில் உள்ள ஒரு வங்கியின் நிலையான வைப்புக் கணக்குகளில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான  பணம் 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் ஜூன் 24 வரை 108 பரிவர்த்தனைகளில்  நிலையான வைப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

பணம் மாற்றப்பட்ட 11 கணக்குகளும் பிரதான சந்தேக நபரின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு சொந்தமானவை என்று தாங்கள்  நம்புவதாக அவர் கூறினார்.

முக்கிய சந்தேக நபரான பெண் வங்கி ஊழியர் இறந்துவிட்ட நிலையில், வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் மீதான தங்கள் விசாரணை இன்னும் நடந்து வருவதாக அவர் கூறினார்!

கடந்த ஜூலை 9 அன்று உரிமையாளரால் பணம் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஜூன் 27 அன்று கணக்கு வைத்திருப்பவர் பணம் எடுக்க வங்கிக்குச் சென்ற பிறகு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில் 37 வயது பெண் வங்கி ஊழியர் ஒருவர் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *