பினாங்கில் 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆறு துப்பாக்கிகள், போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு உபானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து பத்து நாட்கள் போதைப்பொருள் குழுவினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 4.8 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்களையும் 100 தோட்டாக்கள் அடங்கிய 6 கைத்துப்பாக்கிகளையும்  கைப்பற்றியதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றபுலனாய்வு துறையின்(NCID) இயக்குனர்  டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

மேலும் சோதனை நடந்த அந்த குடியிருப்பில் 38 வயதான ஒரு நபர் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அந்த குடியிருப்பின்  தளமானது போதைப் பொருள் ஆய்வகமாகவும், கடையாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ஹெராயின் வகை  (34.14 கிலோ), ஹெராயின் (  13.84 கிலோ), சயாபு (46.19 கிலோ) மற்றும் காஃபின் (118.02 கிலோ) ஆகும்.

சோதனை நடத்தப்பட்ட  குடியிருப்பு பகுதியின் ஒரு அலமாரியில் பல்வேறு திறன் கொண்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும் சமீப கால குற்ற செயல்களில் புகாரளிக்கப்பட்ட ஏதேனும் குற்ற வழக்குகளில் பிஸ்டல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் கண்டறியும் முயற்சியில் உள்ளோம் என்றும்  கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *