தேச நலனை விற்காதீர்கள்-முகமது சுஹைலி எச்சரிக்கை

top-news

புத்ராஜெயா, பிப். 3 –

AKPS அங்கத்தினர்கள், அதிகாரிகள் தங்கள் ஒருமைப்பாட்டை (இன்டெக்ரிட்டி) விற்று, தேச நலனை புறக்கணித்து பேராசைக்கு அடிமையாகாதீர்கள் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

AKPS இயக்குநர் பொது டத்தோஸ்ரீ முகமது சுஹைலி, அங்கத்தினர்கள் தங்கள் ஆசைகளுக்கு அடிமையாகி, நாட்டின் நலனை காட்டிக்கொடுக்கக்கூடாது. ஹிகாயத் ஹங் நாடிம் கதையில், மலாக்கா கோட்டையின் உள்ளே இருந்து கதவைத் திறந்து கொடுத்ததால் நகரம் சரிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இந்த எச்சரிக்கை, AKPS அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டது. சமீப காலங்களில், சில அதிகாரிகள் ஊழல், தவறான பயன்பாட்டில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். AKPS தலைவர், ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இல்லை என்று வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *