எதிர்க்கட்சிக் கருத்துக்கு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தக்கூடாது – டொமினிக் லாவ்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 23-

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேச நிந்தனை (Akta Hasutan) சட்டத்தை பயன்படுத்துவது சரியல்ல என்று Datuk Dr Dominic Lau Hoe Chai வலியுறுத்தியுள்ளார்.

Parti Gerakan Rakyat Malaysia (GERAKAN) கட்சியின் தலைவரான அவர், அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டார். இந்த உரிமை, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 10இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசை விமர்சிப்பது குற்றமாக கருதப்படக் கூடாது என்றும், அதை குற்றச்சாட்டாக மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைக்கு முரணானது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, Barisan Nasional (BN) தலைமையிலான அரசு,  சட்டத்தில் திருத்தம் செய்து ‘அரசு எதிர்ப்பு பேச்சு’ என்பதைக் குற்ற வரம்பில் இருந்து நீக்கியது என்றும் டொமினிக் லாவ் நினைவூட்டினார்.

எந்த அரசு ஆட்சி செய்தாலும், அது அரசியலமைப்பை மதித்து, மக்களின் குரலை கேட்டு, அவர்களின் கருத்துகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *