ஜொகூரில் விரைவுப் பேருந்து விபத்து! 5 பேர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

11 பயணிகளுடன் தலைநகரிலிருந்து ஜொகூர் நோக்கி பயணித்த தனியார் விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் பயணிகளில் ஐவர் படுகாயம் அடைந்ததாக ஜொகூர் மாநில மீட்புப் படை ஆணையர் Muhammad Farhan Ahmad தெரிவித்தார். அதிகாலை 3.56 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு 14 பேர் கொண்ட மீட்புப் படையினர் குழுவுடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Yong Peng – Ayer Hitam இடையில் 91.4 ஆவது கிலோ மீட்டரின் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்புச் சுவரை மோதி, அருகிலுள்ள கால்வாயில் சிக்கியது. இவ்விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற பயணிகள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *