ஜேடிதி, மச்சிடா செல்வியா ஆட்டம் சமநிலையில் முடிந்தது
- Tamil Malar (Reporter)
- 01 Oct, 2025
இஸ்கன்டர் புத்ரி, அக். 2-
செய்தி-வெற்றி மைந்தன்
ஜொகூர் டாருல் தக்சிம் அணி, இஸ்கன்டர் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராகிம் மைதானத்தில் நடைபெற்ற ஏசிஎல்ஈ போட்டியில் மச்சிடா செல்வியா அணியுடன் 0-0 என்ற கோல் இல்லாத டிராவில் முடித்தது.
இந்தப் போட்டியில், ஹரிமாவ் செலாதான் அணியின்
பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ், கோல்கீப்பர் பொறுப்பில் மாற்றம்
செய்தார். அகமது சியான் ஹஸ்மி முகமது, ஏசிஎல்ஈ தொடரில் தனது
முதல் ஆட்டத்தை ஆடினார். இந்த மாற்றம் அணிக்கு புதிய உத்சாகத்தை அளித்தது.
போட்டியின் 12-ஆவது நிமிடத்தில், ஜேடிதி அணி ஒரு ஆபத்தான தருணத்தை எதிர்கொண்டது. ஆஸ்கர் அர்ரிபாஸின் தவறு காரணமாக
பந்து பின்னோக்கி சென்றது, அதை ஷோட்டா புஜியோ பயன்படுத்த முயன்றார். ஆனால், சியானின் விரைவான
செயல்பாடு, பந்தை உதைத்து அபாயத்தைத் தவிர்த்தது.
போட்டியில் ஆதிக்கம்
செலுத்தியது மச்சிடா செல்வியா அணியாக இருந்தது. கோ குரோடாவின் பயிற்சியில்
இயங்கும் இந்த அணி, மற்றொரு
முறை ஜேடிதியின் கோல் பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
கெய்யா சென்டோவின் மூலையடி முயற்சி, சியானால் சிறப்பாக
தடுக்கப்பட்டது. அவர் சரியான இடத்தில் இருந்து பந்தைத்
தடுத்து அணியை காப்பாற்றினார்.
இரு அணிகளும் கோல்
அடிக்க முயன்றபோதிலும், பாதுகாப்பு
வியூகங்கள் காரணமாக போட்டி கோல் இல்லாமல் முடிந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



