பாலியல் தொழிலில் ஈடிபட்ட 21 வெளிநாட்டுப் பெண்களுடன் உள்ளூர் ஆடவர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 19 Jul, 2025
ஜூலை 19,
தலைநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 வெளிநாட்டுப் பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்குப் பெட்டாலிங் ஜெயாவிலும் சுபாங் ஜெயாவிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக JSJ Bukit Aman துறை இயக்குநர் Datuk Fadil Marsus தெரிவித்தார். மொத்தமாக 3 உள்ளுர்வாசிகளும் 21 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட
பெண்களில் இருவர் மலேசியப் பெண்கள் என்றும், China, Mongolia, Uzbekistan, Jepun, Rusia, Vietnam, Laos ஆகிய
நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு மணி
நேரத்திற்குப் பாலியல் சேவைக்காக RM 400 முதல் RM
1,000 வரையில் கட்டணம் பெறுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட
அனைவரும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் JSJ Bukit Aman துறை இயக்குநர்
Datuk Fadil Marsus தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



