ஜொகூர் டாருல் தக்சிம் பினாங்கு அணியை 6-0 கோல்கணக்கில் வீழ்த்தியது

top-news

இஸ்கண்டர் புத்ரி, செப். 13-

செய்தி-வெற்றி மைந்தன்

ஜொகூர் டாருல் தக்சிம் அணி, சுல்தான் இப்ராகிம் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் பினாங்கு அணியை 6-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. தெற்கின் புலிகள் என்று அழைக்கப்படும் ஜேடிதி அணி, பயிற்சியாளர் ஸிஸ்கோ முனோஸின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்தில், ஆரிப் ஐமான் ஹனாபியின் அற்புதமான உதவியைப் பயன்படுத்தி, ஜைரோ டா சில்வா தலையால் முட்டி முதல் கோலைப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஆரிப் ஐமான் 18-ஆவது நிமிடத்தில் ஜேடிதியின் இரண்டாவது கோலை அடித்து அணியின் முன்னிலையை உறுதிப்படுத்தினார். 31-ஆவது நிமிடத்தில், ஆரிப் ஐமான் தனது இரண்டாவது தனிப்பட்ட கோலைப் பதிவு செய்து, ஜேடிதியை 3-0 என்ற முன்னிலையில் வைத்தார்.

ஹரிமாவ் செலாட்டான் அணியின் இந்த அபார ஆட்டம், அவர்களின் தாக்குதல் திறனையும், ஆட்டத்தில் உள்ள ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் ஜேடிதியின் ஒட்டுமொத்த ஆதிக்கமும், ஆரிப் ஐமானின் பிரகாசமான ஆட்டமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த வெற்றியுடன், JDT அணி லீக் தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *